tag:blogger.com,1999:blog-37459532392305449582024-03-13T03:46:13.734-07:00ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்Anonymoushttp://www.blogger.com/profile/15285732257955446067noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-3745953239230544958.post-57103140291884561752015-11-04T03:07:00.002-08:002015-11-04T03:13:34.220-08:00ஜோதிட ரகசியங்கள்! தொழில் அதிபர் ஆகிட<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
தொழிலதிபர் ஆகும் யோகம் யாருக்கு..? ஜோதிட சூட்சுமம்<br />
சொந்த தொழில் செய்ய வேண்டுமெனில் லக்னத்துக்கு தொழில் ஸ்தானமாகிய 10 ஆம் இடத்து அதிபதி,லக்னத்துக்கு வரவு செலவு ஸ்தானமாகிய 2ஆம் இடம்,லக்னத்திற்கு சேமிப்பு ஸ்தானமாகிய 11 ஆம் இட அதிபதி இவர்கள் லக்னத்திற்கு 3,6,8,12ல் மறையாமல் பாம்பு கிரகங்களுடன் சேராமல் இருக்க வேண்டும்.அப்படி மறைந்திருந்தால் முதலீடு போட்ட பணம் எல்லாம் கடலில் கரைத்த பெருங்காயம்தான்..கூட்டு தொழில் செய்ய வேண்டும் எனில் லக்னத்துக்கு 7ஆம் அதிபதி 6,8 ,12ல் மறையாமலிருக்க வேண்டும் இல்லையெனில் நம் பார்ட்னர் நமக்கு பட்டை நாமம் சார்த்திவிடுவார்....<br />
<br />
மிதுன லக்னமாக இருப்பின் அவருக்கு குரு பத்தாம் அதிபதியாக வருவார்...குரு செவ்வாய்,சனியுடன் சேராமல் இருப்பது நல்லது.செவ்வாய் 6ஆம் அதிபதி...தொழில் நிறைய பிரச்சினைகளை சந்திக்கும்.தொழில் மூலம் கடன் உண்டாகும்.குரு சனியுடன் சேர்ந்தால் அவர் எட்டுக்கும் ஒன்பதுக்கும் அதிபதி.அவர் பாக்யாதிபதி ஆச்சே என்று நினைக்கலாம்..9,10 ஆம் அதிபதி சேர்ந்தால் தரமகர்மாதிபதி யோகம் ஆச்சே என நினைக்கலாம்..ஆனால் சனி எட்டுக்கும் அதிபதி ஆச்சே அதனால் முதலில் நல்ல முன்னேற்றம் கொடுத்து நல்ல உயரத்துக்கு கொண்டு போய் அப்புறம் குப்புற தள்ளுவார்.குரு சுக்கிரனுடன் சேராமல் இருக்க வேண்டும்.சுக்கிரன் 5ஆம் அதிபதி பூர்வபுண்ணியாதிபதி ஆச்சே அவருமா அப்படி பண்ணுவார்..ஆம் .அவர் விரயதிபதியும் ஆச்சே தொழில் மூலம் பல வேற்றிகளை கொடுத்து அகலக்கால் வைக்க வைத்து ,பெரும் கடனாளி ஆக்குவார்.<br />
<br />
குரு கேதுவுடன் சேர்ந்தால் ,தொழில் அமையாமல் சிரமப்படுவார்கள்..ராகுவுடன் சேர்ந்தால் மோசமான ஆட்களால் நஷ்டத்தை சந்திப்பர்.குரு 1,4,7,10,11ல் இருந்தால் நன்மையை செய்யும்.கேந்திராதிபத்திய தோசத்தை குரு கொடுப்பார் என்றால் தொழிலில் பிரச்சினை இல்லை.அடுத்தது வரவு செலவுக்கு அதிபதி மிதுன லக்னத்துக்கு யார் என பார்த்தால் சந்திரன்.அவர்3, 6,8,12ல் மறையாமல் இருக்க வேண்டும். 6ல் இருந்தால் தொழில் மூலம் வந்த பணம் வட்டி கட்டவே சரியாக இருக்கும்.12ல் இருந்தால் ஓட்டைப்பானைக்குள் தண்ணீர் ஊற்றியது போல ஆகிவிடும்.8ல் இருந்தால் தொடர்ச்சியாக வீண் செலவுகளாலும் தண்டச்செலவுகளாலும் நஷ்டத்தை சந்திக்க நேரும்.<br />
<br />
11 ஆம் திபதியாக செவ்வாய்தான் வருகிறார் அவரே கடனை நோயை உண்டாக்கும் 6ஆம் அதிபதியாக இருக்கிறார் என்பதால் மிதுன லக்னத்தாருக்கு சேமிப்பு என்பது குதிரைக்கொம்புதான்..மனைவியே எல்லா வரவு செலவையும் பார்த்துக்கொண்டால் நல்லது.11ஆம் அதிபதி செவ்வாய் கெட்டவர் என்பதால் மூத்தவராக இவரே வீட்டில் இருப்பார்.இவருக்கு மூத்தவர் இருந்தால் பகை ஆவார்.பணம் கொஞ்சம் இருந்தால் அதை எப்படி செலவழிப்பது என்பதில்தான் கவனம் இருக்கும்.11 ஆம் அதிபதிதான் சேமிப்பை குறிக்கும்.2க்கு எட்டாம் அதிபதி வலுத்தால் வரவு செலவு நிரந்தரமாக பலன் தரும்.<br />
<br />
10க்கு எட்டாம் அதிபதியாக பாக்யஸ்தானம் வலுத்தால்தன் தொழில் நிரந்தரமாக இருக்கும்...பாக்யாதிபதி மிதுன லக்னத்துக்கு சனியாக வருவதால் அவர் 6,8ல் மறையாமல் இருந்தால் தொழில் நிரந்தரமாக இருக்கும் இல்லையெனில் தொழில் மாறிக்கொண்டே இருக்கும்.<br />
<br />
10 ஆம் இடத்தில் எந்த கிரகமும் இல்லையெனில் 10ஆம் இடத்தை எந்த கிரகமும் பார்க்கவில்லையெனில் சம்பளத்துக்கு வேலைக்கு போவதே நல்லது.சனி வக்ரமாக இருந்தால் சனி கெட்டிருந்தால் வெளிநாடு சென்று விடுவதே சிறப்பு.<br />
<br />
தொழிலில் முன்னேற்றம் அடைய நடப்பு திசையும் முக்கிய பங்கு வகிக்கிறது.ஜாதகத்தில் என்ன திசை நடக்கிறதோ,அந்ததிசை அதிபதி லக்னத்தில் எத்தனாம் இடத்தில் இருக்கிறாரோ அதை பொறுத்து வாழ்வில் மாற்றமும், முன்னேற்றமும் உண்டாகும்.லக்னத்திற்கு அவர் நல்லவராகவும் இருக்க வேண்டும்.3,6,8,12ல் மறையாதவராகவும் இருக்க வேண்டும்...அப்போதுதன் அவர் ஊரும்,உறவும் வியக்கும்படி முன்னேறுகிறார் <a href="http://tamil-marriage-matching-one-second.blogspot.in/2015/09/blog-post.html">ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம் பார்க்கலாம்!</a><br />
<br />
இனி ஆண்களும் பாலியல் பலாத்கார வழக்கு தொடுக்கலாம்<br />
<br />
உலகம் முழுவதும் பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல் தொடர்பான குற்றங்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வரும் நிலையில் சீனாவில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய சட்டத்தின்படி ஆண்களை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்துவது கிரிமினல் குற்றமாக கருதப்படும்.<br />
<br />
சீன அரசின் அதிகாரப்பூர்வ நாளிதழில் வெளியிடப்பட்டுள்ள செய்தியின்படி, தற்போது கொண்டுவரப்பட்டுள்ள சட்டம் ஆண் அல்லது பெண் இருவரில் யார் பாலியல் குற்றங்களில் ஈடுப்பட்டாலும் அவர்களுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க வழிவகை செய்கிறது.<br />
<br />
இதுவரை சீனாவில் பின்பற்றப்பட்டு வந்த சட்டத்தின்படி ஆண்கள் பாலியல் பலாத்கார வழக்கு தொடர முடியாத சூழ்நிலை இருந்தது. அப்படி வழக்கு தொடர விரும்பினாலும் வேறு பிரிவுகளின் கீழ்தான் வழக்கு பதிவு செய்ய முடியும். இதானல் ஆண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு மிகக்குறைந்த அளவிளான தண்டனையே கிடைத்து வந்தது குறிப்பிடத்தக்கது. <br />
தேனியில் பிச்சை எடுத்த சிறுமிக்கு மருத்துவக் கல்லூரியில் படிக்கும் வாய்ப்பு<br />
<br />
கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு பிச்சை எடுத்த ஒரு சிறுமிக்கு, மருத்துவக்கல்லூரியில் படிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதையடுத்து அவர் ரஷ்யா சென்றடைந்தார். இந்த நெகிழ்ச்சியான சம்பவம் குறித்த விவரம் வருமாறு:–<br />
<br />
பிச்சை எடுத்த சிறுமிகள்<br />
<br />
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்த லட்சுமி என்பவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் தனது 2 மகள்களுடன் தேனி பஸ் நிலையத்தில் பிச்சை எடுத்துக் கொண்டு இருந்தார். பின்னர் அந்த பெண்ணை பழனிசெட்டிபட்டியில் உள்ள அவருடைய உறவினர்கள் அழைத்துச் சென்றனர். அவருடைய மகள்களான கார்த்திகா, சர்மிளா ஆகிய 2 பேரும் தேனி அருகே கோடாங்கிபட்டியில் உள்ள ஒரு ஆதரவற்றோர் காப்பகத்தில் சேர்க்கப்பட்டனர்.<br />
<br />
பின்னர் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், கார்த்திகா 8–ம் வகுப்பிலும், சர்மிளா 6–ம் வகுப்பிலும் சேர்க்கப்பட்டனர். கார்த்திகா எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 454 மதிப்பெண்கள் எடுத்தார். கடந்த கல்வி ஆண்டில் பிளஸ்–2 அரசு பொதுத்தேர்வு எழுதிய இவர் 892 மதிப்பெண்கள் எடுத்தார்.<br />
50 சதவீத கட்டணம்<br />
<br />
சென்னையை சேர்ந்த ஒரு கல்வி அமைப்பு ரஷ்யாவில் உள்ள மருத்துவக்கல்லூரியில் படிக்க ஆண்டு தோறும் 200 மாணவிகளை தேர்வு செய்து அனுப்புகிறது. அவர்களில் ஏழ்மை நிலையில் உள்ள குடும்பத்தை சேர்ந்த ஒரு மாணவியும் தேர்வு செய்யப்படுவார். அந்த மாணவி 50 சதவீத கல்விக்கட்டணம் மட்டும் செலுத்தினால் போதும். அதன்படி இந்த ஆண்டு அன்று பஸ் நிலையத்தில் பிச்சை எடுத்த சிறுமி ரஷ்ய மருத்துவக்கல்லூரியில் படிக்க தேர்வானார்.<br />
<br />
இதன்படி அடுத்த மாதம் முதல் வாரத்தில் ரஷ்யா செல்ல இருந்தார். இதற்கிடையே அவசர அழைப்பு காரணமாக கடந்த 2 நாட்களுக்கு முன்பு தேனியில் இருந்து புறப்பட்ட கார்த்திகா நேற்று ரஷ்யா சென்றடைந்தார். இந்த வாய்ப்பு குறித்து கார்த்திகா கூறியதாவது:–<br />
<br />
நான் சங்கரன்கோவிலில் 4–ம் வகுப்பு வரை படித்தேன். பின்னர் அம்மாவுடன் சேர்ந்து நானும், என் தங்கையும் பிச்சை எடுத்தேம். பின்னர் நாங்கள் 2 பேரும் காப்பகத்தில் சேர்க்கப்பட்டோம். மனநலம் பாதிக்கப்பட்டு இருந்த எங்கள் தாயாரை, உறவினர் வீட்டில் சங்கிலியால் கட்டி வைத்திருந்தனர். எனது எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் வெளியான மறுநாள் எங்கள் தாயார் இறந்து விட்டார்.<br />
கலெக்டர் ஆக வேண்டும்<br />
<br />
<br />
எனக்கு ரஷ்யாவில் மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்தது கடவுளின் அருள்தான். அவர் மனித உருவில் வந்து உதவுகிறார். என்னிடம் அணிந்து செல்ல நல்ல ஆடைகள் கூட கிடையாது. எனக்கு புதிய ஆடைகள், செருப்பு, பைகள் என பலரும் வாங்கிக் கொடுத்து வழியனுப்பி வைத்தனர். நான் சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி வந்து அங்கிருந்து ரஷ்யா சென்றடைந்தேன்.<br />
<br />
தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை சேர்ந்த டாக்டர்கள் பலர் மருத்துவப் படிப்புக்கு தேவையான புத்தகங்களை வாங்கிக் கொடுத்தனர். எனக்கு கலெக்டர் ஆக வேண்டும் என்று ஆசை உள்ளது. ஏனெனில் நான் பணியாற்றும் இடங்களில் பிச்சைக்காரர்கள் இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என்பதே என் லட்சியம்.<br />
<br />
இவ்வாறு மாணவி கார்த்திகா தெரிவித்தார். வருடைய தங்கை சர்மிளா தற்போது பிளஸ்–1 படித்து வருகிறார். <br />
<br />
<br />
<br /></div>
Anonymoushttp://www.blogger.com/profile/15285732257955446067noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3745953239230544958.post-16671028602610222042015-11-04T03:04:00.003-08:002015-11-04T03:04:55.788-08:00கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்தாதது ஏன்? <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்தாதது ஏன்? <br /><br /> இந்தியர்கள் ஏன் கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தவில்லை. நமது காலத்தில் இதுதான் விளங்காத மர்மமாக இருக்கிறது. எப்போதாவது இந்திய அணி வெற்றி பெறுவதை நான் குறிப்பிடவில்லை. நிரந்தரமாக ஆதிக்கம் செலுத்துவதைப் பற்றி கூறுகிறேன். வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரு காலத்தில் ஆதிக்கம் செலுத்தியது. அதன்பின் ஆஸ்திரேலியா கோலோச்சியது. அதுபோல் இந்திய அணியால் முடியாதது ஏன்?.<br /><br />உலகிலேயே பணக்கார கிரிக்கெட் வாரியம் உள்ள நாடுதான் இந்தியா. அதனால் பணத்துக்குப் பிரச்சினையில்லை. பண விஷயத்தில் நாம் கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்துகிறோம். மற்ற அணிகள் எல்லாம் இரண்டாம்பட்சம்தான். அந்த வகையில் ஐபிஎல் போட்டிகள் லாபகரமானதாக உள்ளன. ஆனால், இந்தியாவின் செல்வாக்கு உள்நாட்டுக்குள் மட்டும் அடங்கிவிடவில்லை. உலகில் எங்கு கிரிக்கெட் நடந்தாலும், இந்திய கம்பெனிகள் மோட்டார் சைக்கிள் முதல் பான் மசாலா வரை உள்ள விளம்பரங்களை வெளியிடுகின்றன. ஆனால், கிரிக்கெட்டில் இந்தியா ஏன் ஆதிக்கம் செலுத்தவில்லை.<br /><br />இதுவரை இந்தியா 157 டெஸ்ட் போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. வெற்றி 127 மட்டும்தான். உள்நாட்டில் மட்டும் நாம் சிறப்பாக விளையாடுகிறோம். இங்குள்ள சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான (ஸ்லோ விக்கெட்) மைதானங்கள் அப்படிப்பட்டவை. மற்ற அணிகளால் விக்கெட் எடுப்பது சிரமம். ஆனால், வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான (பாஸ்ட் விக்கெட்) மைதானங்களில் விரைவாக இந்திய அணி தோல்வி அடைகிறது.<br /><br />ஆனால், முக்கியமான நாடுகளைச் சேர்ந்த எல்லா அணிகளுடனும் நாம் தோல்விக்கான புள்ளிவிவரங்க ளைதான் வைத்திருக்கிறோம். ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட் போட்டிகளில் 40 தோல்வி, வெற்றி 24. இங்கிலாந்துடன் 43 தோல்வி, 21 வெற்றி. வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் தோல்வி 30, வெற்றி 16 மட்டும்தான். பாகிஸ்தானிடம் கூட 12 டெஸ்ட்டில் தோல்வி அடைந்திருக்கிறோம். 12 போட்டியில்தான் வெற்றி கிடைத்துள்ளது. (நல்லவேளை பாகிஸ்தானுடன் நீண்ட நாட்களாக விளையாடவில்லை. விளையாடி இருந்தால் தோல்வி எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருந்திருக்கும்.)<br /><br />கடந்த 20 ஆண்டுகளாகதான் தென் ஆப்பிரிக்கா அணி சரியான முறையில் சர்வதேச போட்டிகளை விளையாடி வருகிறது. ஆனால், அந்த அணியுடன் கூட 13 டெஸ்டில் இந்தியா தோல்வி கண்டுள்ளது. வெற்றி வெறும் 7தான். இலங்கை, நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான போட்டிகளில் மட்டும்தான் இந்திய அணி சாதனை படைத்துள்ளது. இலங்கையுடனான டெஸ்ட்டில் 7 தோல்வி, 16 வெற்றியுடனும் நியூசிலாந்துடனான போட்டிகளில் 10 தோல்வி 18 வெற்றிகளுடனும் இந்திய அணி இருக்கிறது. ஒரு நாள் போட்டிகளை பொறுத்த வரையிலும் மிகப்பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை. இதுபோல் இன்னும் பல புள்ளிவிவரங்களை சொல்லி உங்கள் மனதை சோர்வடைய செய்ய நான் விரும்பவில்லை.<br /><br />கிரிக்கெட் போட்டிகளில் நாம் வெளிப்படுத்தும் வெறித்தனமான தேசப்பற்றும், இந்திய மக்களின் ஆர்வமும் கிரிக்கெட் அணி விளையாட்டில் எதிரொலிக்கவில்லை. என்னுடைய கேள்வி என்னவென்றால், இந்தியர்கள் ஆர்வம் காட்டும் இந்த ஒரு விளையாட்டில் நாம் ஏன் ஆதிக்கம் செலுத்தவில்லை. இந்தியர்கள் 120 கோடி பேர் உள்ளனர். பெரும்பாலானவர்கள் பார்ப்பதும் விளையாடுவதும் கிரிக்கெட்தான். ஆஸ்திரேலியாவில் 2.5 கோடிக்கும் குறைவான மக்கள்தொகைதான். ஆனால் அவர்கள் கிரிக்கெட்டை மட்டும் விளையாட்டாக நினைப் பதில்லை.<br /><br />ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் ஒன்றாக சேர்த்தால், இந்தியாவின் மக்கள்தொகையில் பாதி கூட வராது. எனவே, போதிய அளவுக்கு திறமை வாய்ந்தவர்கள் இல்லை என்று சொல்வதற்கில்லை. ஐபிஎல் அணிகளை விரிவுபடுத்த முடியாததற்கு உள்ள சிக்கல் என்னவென்றால், உள்ளூரில் அணிகளை நிரப்புவதற்கு திறமைவாய்ந்தவர்கள் போதிய அளவுக்கு இல்லை என்பதுதான். எனவேதான் உள்ளூர் ஆட்டக்காரர்கள் சிலருக்கு மட்டும் சம்பளம் கொட்டி கொடுக்கப்படுகிறது. இதற்கு தேவை அதிகம் இருந்தும் சப்ளை குறைவாக இருப்பதுதான் காரணம்.<br /><br />நம்மிடம் இருக்கும் மக்களின் எண்ணிக்கையை பார்க்கும்போது, திறமைவாய்ந்த ஆஸ்திரேலிய அணியை போல 60 அணிகள் இந்தியாவிடம் இருக்க வேண்டும். ஆனால், அப்படி ஒரு அணிகூட இல்லை. கிரிக்கெட் வரலாற்றில் அப்படிப்பட்ட திறமை வாய்ந்த அணி ஒன்றுகூட நம்மிடம் இருந்ததில்லை. ஏன் இல்லை?<br /><br />இதில் ஸ்லோ விக்கெட், பாஸ்ட் விக்கெட் என்ற கேள்வி இல்லை. அப்படியே இருந்தாலும், பாஸ்ட் விக்கெட்டில் இந்திய அணிக்கு பயிற்சி இல்லாதது ஏன்? இந்திய கிரிக்கெட் அணியிடம் போதிய அளவுக்கு பணம் உள்ளது. நமது அணி சரியான முறையில் பயிற்சி பெறுவதற்கு என்ன தேவையோ அதை பெற முடியும். ஆனால், ஏன் செய்யவில்லை? ஏனெனில், பயிற்சி இல்லாதது, சரியான வசதிகள் இல்லாதது போன்றவை எல்லாம் உண்மையான பிரச்சினையாக இல்லை. குறிக்கோள் மற்றும் விசேஷ திறமையில்தான் பிரச்சினை அடங்கி இருக்கிறது.<br /><br />எந்த விஷயத்திலும் நாம் உலக தலைவர்கள் இல்லை. அந்த வகையில் கிரிக்கெட் விளையாட்டையும் நாம் வழிநடத்தி செல்வதில்லை. இதில் ஆச்சரியம் எதுவும் இல்லை. தனிநபராக விசேஷ திறமைகளில் நம்முடைய முதலீடு குறைவு. கிரிக்கெட் மைதானத்தில் இந்திய வீரர்களை பார்த்து, ஆஸ்திரேலிய வீரர்கள், வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் அல்லது இப்போது இந்தியா வந்துள்ள தென் ஆப்பிரிக்க வீர்களை பார்த்தால் ஏதோ தவறு அல்லது வித்தியாசம் தெரியும். ஒரு பக்கம் (நமது பக்கம் அல்ல) ஓட்டப் பந்தய வீரர்கள் போல இருக்கிறார்கள். மறு பக்கம் இந்தியர்கள் கொழு கொழுவென சப்பியாக அதேசமயம் தகுதியற்றும் இருக்கலாம். எனினும், இன்னும் தேசிய அணியாக உருவாக்கி இருக்கிறார்கள். நமக்கு திறமையை விட இதுபோதும் என்பதுதான் மிக முக்கியம்.<br /><br />நம்மில் லட்சக்கணக்கானோர் கிரிக்கெட் பார்ப்பதை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறோம். இந்த விளையாட்டுக்கு கோடிக்கணக்கில் பணம் கொடுத்து கொண்டுதான் இருக்கிறோம். கிரிக்கெட்டில் ஏன் மோசமாக இருக்கிறோம் என்பதை சிந்திப்பதில்லை. <a href="http://tamil-marriage-matching-one-second.blogspot.in/2015/09/blog-post.html">ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம் பார்க்கும் ரகசியம்!</a><br />
<br /></div>
Anonymoushttp://www.blogger.com/profile/15285732257955446067noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3745953239230544958.post-90934229312991643082015-11-04T03:03:00.000-08:002015-11-04T03:03:18.376-08:00இளம் வயதிலேயே வெள்ளை முடி வருவதற்கான காரணங்கள்!!!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
இளம் வயதிலேயே வெள்ளை முடி வருவதற்கான காரணங்கள்!!!<br />தற்போது இளம் வயதிலேயே தலையில் உள்ள முடியானது நரைக்க ஆரம்பித்துவிடுகிறது. இது தற்போதைய இளம் வயதினர் சந்திக்கும் பிரச்சனைகளில் முதன்மையானவை. அதிலும் சிலரைப் பார்த்தால், அவருக்கு வயது 23 தான் இருக்கும். ஆனால் அவரது முடியைப் பார்த்தால், அது அவருக்கு வயதாகியிருக்குமோ என்ற எண்ணத்தை வரவழைத்துவிடும். இப்படி இளம் வயதில் நரைமுடி வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. பொதுவாக நரைமுடி வருவதற்கு மருத்துவரீதியாக முன்மையான காரணம் என்னவென்றால், முடிக்கு கருப்பு நிறத்தை வழங்கும் மெலனின் என்னும் நிறமி குறைவாக இருப்பது தான். இந்த மெலனினானது வயதாக ஆகத் தான் குறைய ஆரம்பிக்கும். ஆனால் தற்போது இந்த மெலனின் சிறு வயதினருக்கே குறைய ஆரம்பித்து நரைமுடியை ஏற்படுத்திவிடுகிறது. நரைமுடி பிரச்சனையால் அவஸ்தைப்படுறீங்களா? ஈஸியா சரிசெய்யலாம்... அதுமட்டுமல்லாமல் இந்த நரைமுடி வருவதற்கு இன்னும் நிறைய காரணங்கள் உள்ளன. முதலில் அந்த காரணங்களை அறிந்து கொண்டு, பின் அதற்கேற்றாற் போல் நரைமுடியைப் போக்க முயற்சி செய்யுங்கள். இப்போது நரைமுடி வருவதற்கு மருத்துவரீதியான காரணங்கள் என்னவென்று பார்ப்போம்.மரபணுக்கள் நரைமுடி வருவதற்கு பரம்பரையும் ஒரு முக்கியமான காரணமாகும். உதாரணமாக, உங்கள் வீட்டில் அம்மா அல்லது அப்பாவிற்கு இளம் வயதிலேயே நரைக்க ஆரம்பித்திருந்தால், உங்களுக்கும் நரைமுடியானது இளம் வயதிலேலே வந்துவிடும்.வைட்டமின் பி12 வைட்டமின் பி12 குறைபாடு இருந்தால், முடிக்கு நிறத்தை வழங்கும் மெலனின் நிறமியும் குறைய ஆரம்பிக்கும். எனவே உடலில் வைட்டமின் பி12 சரியான அளவில் இருந்தால், நரைமுடி வராமல் இருக்கும். தைராய்டு தைராய்டு இருந்தாலும் வெள்ளை முடி வர ஆரம்பிக்கும். அதிலும் தற்போது நிறைய இளம் வயதினர் தைராய்டு பிரச்சனையால் அவஸ்தைப்படுகின்றனர். இதற்கு முக்கிய காரணம் உணவு பழக்கமும், வாழ்க்கை முறையும் தான். ஆகவே இவற்றில் சரியாக இருந்தால், தைராய்டு பிரச்சனையுடன், நரைமுடி பிரச்சனையில் இருந்தும் விடுபடலாம்.ஹார்மோன் ஏற்றத்தாழ்வு நிறைய பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் நரைமுடியானது வரும். இதற்கு காரணம் இக்காலத்தில் ஏற்படும் ஹார்மோன்களில் ஏற்றத்தாழ்வுகள் தான்.பிட்யூட்டரி சுரப்பி முடியின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு பிட்யூட்டரி சுரப்பி தான் முக்கிய பங்கினை வகிக்கிறது. எப்போது இந்த பிட்யூட்டரி சுரப்பியானது சரியாக செயல்படாமல் போகிறதோ, அப்போது முடியானது நரைக்க ஆரம்பிக்கும். அயோடின் குறைபாடு அயோடின் என்னும் கனிமச்சத்து உடலுக்கு மிகவம் இன்றியமையாதது. இத்தகைய சத்தானது குறைவாக இருந்தால், நரைமுடி வர ஆரம்பிக்கும்.இரத்த சோகை இரத்த சோகை ஏற்பட்டாலும், உடலானது பலவீனமடைந்து, முடிக்கு வேண்டிய சத்துக்கள் கிடைக்காமல், நரைக்க ஆரம்பித்துவிடும்.ஊட்டச்சத்து குறைபாடு ஊட்டச்சத்து குறைபாட்டின் காரணமாகவும், வெள்ளை முடியாது வர ஆரம்பிக்கும். ஏனெனில் இதனால் உடலுக்கும், முடிக்கும் வேண்டிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல் போய்விடும்.காப்பர் குறைபாடு முடியின் ஆரோக்கியத்திற்கு காப்பர் மிகவும் இன்றியமையாத கனிமச்சத்தாகும். இத்தகைய காப்பர் உடலில் குறைவாக இருந்தால், முடியானது வெள்ளையாகி, பொலிவிழந்து காணப்படும்டென்சன் அளவுக்கு அதிகமாக டென்சன் ஆகும் போது, ஸ்கால்ப்பானது பாதிக்கப்பட்டு, மயிர்கால்களுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைக்காமல் போய், முடியை வெள்ளையாக்கிவிடும்.<br /><a href="http://tamil-marriage-matching-one-second.blogspot.in/2015/09/blog-post.html">ஒரே நிமிடத்தில் திருமணப் பொருத்தம் பார்ப்பது எப்படி?</a></div>
Anonymoushttp://www.blogger.com/profile/15285732257955446067noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3745953239230544958.post-86462557984406346242015-09-30T19:36:00.001-07:002015-11-06T04:56:03.736-08:00திருமண பொருத்தம் ஒரே நிமிடத்தில் - பவானி<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<a href="http://karthikjothidam.blogspot.in/2015/07/blog-post_91.html">திருமண பொருத்தம் அட்டவணை</a><br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://2.bp.blogspot.com/-ELUHX8Ct6LE/VgybYsUn5_I/AAAAAAAAAKE/lJPXpMB2Fn0/s1600/a2.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://2.bp.blogspot.com/-ELUHX8Ct6LE/VgybYsUn5_I/AAAAAAAAAKE/lJPXpMB2Fn0/s1600/a2.jpg" /></a></div>
<br />
<a href="http://topastrologerastrology-solution-swami.blogspot.in/2015/10/best-astrologer-thiru.html">Famous Astrologer in India</a><br />
<a href="http://raj38.blogspot.in/2015/09/blog-post.html">திருமண பொருத்தம்,தின,கண,மகேந்திர,ஸதிரீதீர்க்க,யோனி,ராசி,வசிய,ரச்சு, வேதை, பொருத்தம்</a><br />
<br />
<br /></div>
Anonymoushttp://www.blogger.com/profile/15285732257955446067noreply@blogger.com